Friday 3 June 2011

சுயநலம்


சுயநலம் மனிதன்


மென்ற புல்லை

தின்று விடாது

கன்றை இழுத்து

ஒன்றி விட்டான்

ஈன்ற பசுவிடம்.

நன்றி தெரிவித்து

நன்றான பாலை

வென்ற உணர்வு

தோன்றும் போது.....

மீண்டும் இழுத்து

கன்றை மறைத்தான்.

சுரக்கும் பாலை

கரந்து மகிழ்வது

அரக்க குணமா?

குரங்கு குணமா?

இரண்டும் இணைந்து

உருவான குணமா?

கருவறைப் பிறப்பு

இருவருக்கும் பொதுவன்றோ?

அருமைத் தாயின்

பெருமை சேயன்றோ?

கருத்து மட்டுமிங்கு

மாறுபடுவ தேனோ?


- Annasamy கவிதையிலிருந்து

நான் படித்ததில் பிடத்த கவிதையிலிருந்து